Posts

Showing posts from July, 2021

கேள்வி????

Image
என் மகன் எப்பவும் கேள்வி கேட்டுட்டே இருப்பான். திடீரென்று ஒருநாள், "என்னிடம் வந்து  சூரியன் உடைய வீடு எங்க இருக்குது"?கேட்டான். "நானும் வானத்தில"ன்னு சொன்னேன். அவன், "இல்லம்மா! சூரியன் மலைக்கு🌄 உள்ளிருந்து தானே வருது. அப்போ மலை தான் அதோட வீடு அப்படின்னு சொன்னா." "கடவுள் எங்க இருக்காரு? எதுக்கு நிறைய கடவுள் இருக்கு? நம்ம ஹிந்துவா கிறிஸ்டியனா ? பின் ஏன் மாதா கோயிலுக்கு போறோம்? நம்ம இறந்த உடனே எங்கம்மா போறோம்". இப்படிப் பலப்பல கேள்விகள் கேட்பான்... சில சமயம் பதில் அவனுக்கு எப்படி சொல்ல வைத்து சொல்லி புரிய வைக்கணும் எனக்கு தெரியாது.. இப்படித்தான் ஒருநாள் ஜகமே தந்திரம் படம் பாத்துட்டு அதில் அகதிகளை  எல்லாம் ஒரு குழியிலே எரிப்பார்கள். அதை பார்த்துவிட்டு அவங்களும் மனுஷங்கதானே ஏன் மா ஒருத்தருக்கொருத்தர் அடிக்காங்க?  எரித்தால்  அவங்களுக்கு வலிக்கும்ல என்று கேட்டான். நான்,  "இறந்தவர்களுக்கு உணர்வு இருக்காது. அதனால வலிக்காது சொன்னேன். அப்ப நான் இறந்தாலும் அப்படித்தானே அழுதுகொண்டே கேட்கிறான். அவனை சமாதானப்படுத்த ஒரு தாயாய் நான் ...

பாராட்டு

Image
உலகில் வாழும் அனைவரும் பாராட்டுகளுக்காக ஏங்கி நிற்போம்... ஆனால், பெண் அவள் தன் வாழ்நாளில் அத்தனை நாட்களும்,நேரங்களும் தன் குடும்ப உறுப்பினர்களுக்காக மட்டுமே செலவு செய்து; ஏதோ ஒரு நாள்  உடலின் சுகவினத்தால் செய்ய மறந்த செயலுக்காக குறை சொல்லும் சமூகத்தில் வாழும் அறிவாளிகள் நாம்... செய்த செயலுக்கு பாராட்டு தினம்தோறும் வேண்டியதில்லை.. ஒருநாள் மறக்கும் செயலுக்கு குறை சொல்லாமல் இருந்தாலே போதும்....

ஆராய்ச்சி......

Image
சிறு வயதில் கேட்கும் கேள்விகளே ஆராய்ச்சியின் தொடக்கம்.. ஏன் எதற்கு எப்படி என்று கேள்விகளின் ஆராய்ச்சியே விஞ்ஞானத்தின் வளர்ச்சி... சிறு குழந்தை விளையாட்டு பொருளைப்  ஆராய்ச்சி செய்வது போல் தினமும் நாமும் மனதில் எண்ணத்தை ஆராய்ச்சி செய்கிறோம்... ஆராய்ச்சியைப் செயல்படுத்தி வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சியும்; தோல்வி கிடைத்தால் அனுபவமும் பெறுகின்றோம்... நரம்பில்லாத நாக்கு பேசும்போதும் ஆராய்ச்சி செய்து பேசுவோம்... எண்ணங்களை ஆராய்ச்சி செய்து நல்வழி நடப்போம்... நன்றி.....

புதுமண தம்பதி💝

Image
" யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும். நாம் வந்த பின்னாலும் நாம் சென்ற பின்னாலும் சொந்தமும் பந்தமும் பேரை சொல்லும்" . வேனில் பாடலுக்கு ஏற்ப சிறுவர்கள் அனைவரும் ஆடிபாடி கொண்டாடி வந்தனர். பெரியவர்கள் அனைவரும் அதை ரசித்து மகிழ்ந்து வந்தனர். சிவசைலம் "கோவில் வந்தாச்சு. இறங்குங்க , இறங்குங்க" என்று ஒருவர் கூற அனைவரும் கீழே இறங்கினர். சுற்றி பசுமை , இனிமையான தென்றல் வீச சிவநாமம் ஒலிக்கின்றது கோவிலில். பரவசத்துடன் நுழைந்தனர் மாப்பிள்ளையும் பெண்ணும். மாப்பிள்ளை, பெண்ணும் சிவனையும் அம்பாளையும் தரிசனம் செய்தனர். அர்ச்சகர் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் அர்ச்சனை செய்தார். கோமாதா பூஜை நடந்தது; பின்பு மற்ற சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து அர்ச்சகர் புது ஆடை  கொடுத்தார். மாப்பிள்ளை ஜோராக புது ஆடை அணிந்து மணப்பலகையில் அமர்ந்தார். "சீக்கிரம் சீக்கிரம் பொண்ணு கூப்பிடுவாங்க. மாப்பிள்ளை ரெடி ஆயிட்டாரு " என்று கூட்டத்தில் ஒருவர் கூறினார். மணபெண்ணை அலங்காரம் செய்த பெண்களோ கேலி செய்த வண்ணம் அலங்கரித்தனர். "போதும்டி விடுங்க....

அகம் புறம்...

Image
தினம் தினம் முகமூடி போடுகிறோம் அகத்திற்கும் புறத்திற்கும்... காலத்திற்கு ஏற்ப; மனிதர்களுக்கு ஏற்ப; விருப்பங்களுக்கு ஏற்ப; தொழிலுக்கு ஏற்ப; போடும் முகமூடிகள் அநேகம்... 10 மாதம் தாயின் கருவறையிலும், சாகும் தருவாயிலும் மட்டுமே மறக்கிறோம் முகமூடியை அகத்திற்கு புறத்திற்கும் போட... புறம் அழகாக அகத்தில் வஞ்சம் சேர்க்காதீர்கள்... அகத்தில் நேர்மை இருந்தால்; புறத்தில் தானாய் ஒட்டிக்கொள்ளும் கம்பீரம்... அகமும் புறமும் அழகாக சக மனித உணர்வுகளை மிதிக்காமல் மதித்து நடப்போம்....

அவா...

Image
 காலைப் பொழுதில்  இளந் தென்றல் வீச  உன்னோடு இலக்கற்ற பயணம் போக அவா... அந்திப்பொழுதில்  இரு பக்கமும்  மரங்கள் சூழ  சாலையில் உன் கைகள் கோர்த்து உன்னோடு நடக்க அவா.. வெண்மதி இரவில்  கடல் அலைகள்  கரையோடு விளையாட  நான் உன்னோடு அளவில்லா கதை  பேச அவா... கண்ணோடு கண்கள் சேர்த்து இமைக்காமல் காதல் மொழி  பேச அவா... வாய்மொழி பேசாமல்  உன் மனம் மொழி  கேட்க அவா.... உன் நெஞ்சில் சாய்ந்து  உன் இதயத்தின் ஒலி  கேட்க அவா... உன்னை புண்படுத்திய சிலர் முன்னால் உன்னை தலை நிமிர்த்தி உன்னோடு வாழ அவா... உன் இதயத் துடிப்பு  நிற்கும் வேளையில் என் இதயத் துடிப்பும்  நிற்க அவா....💞

முக்கியமான விஷயம்!

வணக்கம் தோழமைகளே! முக்கியமான விஷயம்! பிரதிலிபி தளத்தில் கதை திருடப்படுவதாக அறிந்தேன். முன்னெச்சரிக்கையாக எனது படைப்புகளை எனது பிளாக்கிலும் பதிவேற்றுகிறேன். (பிரதிலிபி தளத்தின் படைப்புகள் உட்பட.) *ஆமா எவ்வளவு பேர் அழகா எழுதுறாங்க. நீ என்னமோ  ஓவர் பண்றா நினைக்கிறீர்களா? இருக்கலாம்! எனது படைப்புகள் கிறுக்கல் ஆக  இருந்தாலும்😜 இவை அனைத்தும் எனது சொந்த எண்ணத்தின் வெளிப்பாடு.*        

காயம்....

Image
மாலையில் ரவி பம்பரம் சுற்றி விளையாடினான் அவன் சக தோழர்களுடன். ரவி ஒரு முரட்டு பையன். தந்தை இல்லாதவன். தாயின் மீது அளவில்லாத பாசம் கொண்டவன். அவனை அடக்கும் சக்தி அவன் தாயின் அன்பிற்கு மட்டுமே உண்டு. விளையாட்டில் சக தோழர்களுடன் சண்டையிட்டு ஒருவன் தலையில் கல்லை கொண்டு வீசி விட்டான். தலையில் இரத்தத்தை பார்த்ததும் ஓடி வந்துவிட்டான் வீட்டிற்கு. வீட்டிற்கு வந்த மகனை பார்த்து தாய் ,"கை கால் கழுவிட்டு வா ராசா. காபி கொண்டுவரேன்.   நீ சமத்தா படிச்சு, நல்ல புள்ளையா இருந்தா தான் எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்" என்றாள். இவன் உள்ளமோ குறுகுறுத்தது. வாய் ஒன்றும் பேசாமல் "ம்ம்ம்" சொன்னான். வெளியில் நண்பனின் தாய் கத்தினாள். "என்ன சத்தம் ? என்றவாறே ரவி அம்மா  வெளிய போனால். "பிள்ளையா பெத்து வச்சிருக்க. இப்படியா என் மகனை அடிப்பான்? பாரு, என் மகன் தலையில் அடிப்பட்டு இரத்தம் வருது." ரவி திருதிருவென முழித்து "அம்மா தெரியாம பண்ணிட்டேன். இனிமே அப்படி பண்ண மாட்டேன்" என்று அழுதான். ரவி தாய் ஒன்றும் சொல்லவில்லை. அவள் மனம் அழுதது. "ம்மா.. என் ப...

நினைவலைகள்...

Image
"ஆயிரமாயிரம் கருத்துக்கள் உள்ளே புதைந்த போதிலும் அமைதியாக தான் இருக்கிறது புத்தகம் ." காலை 8 மணி: இலக்கியா பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள். காலை டிபன் ,மதியம் சாப்பாடு  சமையல் முடித்து கணவன், குழந்தைகள் அனைவரும் அலுவலகம், பள்ளி அனுப்பிவிட்டு "அப்பாடா "என்று அமர்ந்தாள். கணவன் அரசு வேலை பார்க்கிறார். அவர் வேலையின் பொருட்டு மாற்றலாகி வேறு ஊர் வந்து ஒரு வாரம் ஆகி விட்டது. இதுவரை சொந்த ஊரிலே அம்மாவின் அருகிலே இருத்தால். இப்போது பொள்ளாச்சியில் புது வீடு குடி புகுந்து பொருட்கள் பாதி ஒழுங்கு வைத்து ;பாதி அப்படியே இருந்தது.  எப்போதும் சலிக்காது வேலை பார்த்தவள் இலக்கியா.அதனால் சும்மா இருக்க முடியவில்லை. புத்தக அலமாரி சுத்தம் செய்துவிட்டு புத்தகம் படிக்கலாம் என்று தூசி தட்ட சென்றாள். இலக்கியா ஒரு புத்தகப்புழு .அதன் காரணமாக அவள் அம்மா  தன்னிடம் உள்ள புத்தக அலமாரியை அப்படியே கொடுத்துவிட்டார்.  கொடுக்கும்போது: "என் அப்பா எனக்காக கொடுத்தது. அதை  கண் போன்று பாதுகாக்க வேண்டும்"  கூறியே சாவியை கொடுத்தாள். அதில் ஒரு டயரி இருந்தது. அது அவள் அம்மாவின் உடையது. அதிலி...