Posts

Showing posts from August, 2021

முகம் பார்க்கா முகநூல் நட்பு...

Image
சர சர சார காத்து வீசும் போது; ஜாட பாத்து பேசும் போது; சார பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே... என்ற பாடலுக்கு ஏற்ப நடனமாடிக் கொண்டு இருந்தாள் மித்ரா...  பெயருக்கு ஏற்றார் போல் அனைவரிடமும் நட்புடன் பேசுபவள். ஆனால் அமைதியாக இருப்பாள் பெரும்பாலும். மித்ரா பொழுதுபோக்குக்காக கதை எழுதி அவளது பிளாக்கில் பதிவிடுபவள். ...... இனியா கல்லூரிப் பேராசிரியர். புத்தக வாசிப்பு என்றால் உயிர்.. ஜாலியான நபர். எதுவும் ஈசியா கையாளுபவள். அனைவரோடும் எளிதில் பழகிவிடுவாள். ஃபேஸ்புக்(முகநூல்) நம்ம பாஷையில் மூஞ்சி புத்தகம்.. இன்று பலரின் உலகம் அதுவே... பொழுது போக வேண்டும் என்பதற்காக பேஸ்புக்கை திறந்து இப்பொழுது முழு நேரமும் அதிலே மூழ்கிவிடுகின்றனர். அதுவே வாடிக்கையாகி விடுகிறது சிலருக்கு... அதனால்தன் என்னவோ  மித்ரா ஃபேஸ்புக் அன்இன்ஸ்டால் செய்துவிட்டால். ஆனால் அவள் பின்தொடரும் சிலரின் பதிவுகள்  ஃபேஸ்புக்கில் மட்டுமே இடம்பெறுகின்றன. அதனால் மித்ரா ஃபேஸ்புக் இன்ஸ்டால் செய்து அவளது முகப்பை லாக் செய்திருப்பாள். ஒருநாள் அவள் முகநூல் பக்கத்திற்கு ஒரு செய்தி  வந்தது... "ஹாய் மித்ரா" என்ற...

பாரதம்....

Image
பல பேரின் உயிர் மூச்சை வாங்கி கொண்டு தான் இன்று நாம் சுவாசிக்கிறோம் சுதந்திரக் காற்றை... வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம் முந்திய தலைமுறையின் தியாகத்தையும், பெருமையையும்.... நாமும் நாம் பெற்ற சுதந்திரத்தை நல்வழியில் மட்டுமே பயன்படுத்தி நமது தேசத்தை உயர்த்துவோம்... நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர் கடமையை சரிவர செய்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வோம்.... வளரும் தலைமுறையினருக்கும் தேசப்பற்று சேர்த்து ஊட்டியே வளர்ப்போம்... வாழ்க பாரதம். ஜெய் ஹிந்த்! அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்....

கண்களால் பேசும் பெண்...

Image
நான் பிரதிலிபி ஆப்பில் ஒரு தலைப்பு பார்த்தேன்... "கண்களால் பேசும் பெண்" இந்த தலைப்பை பார்த்ததும் எனக்கு ஞாபகம் வந்தது பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களே. கண்களுக்கு அதிகம் பேசும் சக்தி உண்டு. வாய்மொழி வார்த்தைகளை விட கண்களால் பேசும் வார்த்தைகள் அபரிதமான அர்த்தங்கள் உண்டு.. பிறவியிலேயே ஊமையாகவும், செவிடாகும் இருப்பவர்களுக்கு இயற்கையாகவே கடவுள் கொடுத்த சக்தி கண்கள்.. பொதுவாகவே இந்த கண்களை கொண்டு எதிரில் வருபவர் நல்லவரா, கெட்டவரா என்று அறியும் ஆற்றல் இருக்கும். "பொன்னியின் செல்வனில்" - மந்தாகினி உயிர் பிரியும் தருணத்தில்; சக்கரவர்த்தி சுந்தரசோழன் மடியில் படுத்து தன் கண்களாலேயே தான் அனுபவித்த மொத்த துன்பத்தையும், அவர்மீது கொண்ட காதலையும் வெளிப்படுத்தினாள். மந்தாகினிக்கும் ஏதோ அரிய சக்தி இருந்தது. அதனால்தான் அருள்மொழிவர்மனை பலமுறை காப்பாற்றினாள். கடைசி நேரத்திலும் சக்கரவர்த்தியும் காப்பாற்றினாள். ஒருவர் மேல் நாம் கொண்ட அன்பை வாய்மொழியாக சொல்வதை விட கண்களால் சொல்வது சிறந்தது. நம்மை புரிந்து கொண்டவர்களால் மட்டுமே நம் கண் மொழியையும், அர்த்தத்தையும் புரிய முடியும...

தேடி கிடைத்த புத்தகம் ❤️

Image
  எனக்கு படிக்குறதுனா கொள்ள ஆசை... அதுவும் எனக்கு புடிச்ச மாதிரி கதை எல்லாம் கேட்கவே வேண்டாம்... அப்படி நான் படிக்கணும் படிக்கணும் நெனச்ச புத்தகம் " பொன்னியின் செல்வன் " காலேஜ் படிக்கும் போதுல இருந்து நினைத்தேன்.. பட் வாங்க முடியல... ஆன்லைன்ல கதை இருக்கு. பட் புக்கை எடுத்து வாசிக்கிறது திருப்தி அதுல எனக்கு இல்லை... சில கதைகள் புத்தகமாக வாசித்தால் மட்டுமே நன்றாக இருக்கும். நாட்கள் உருண்டோடி இப்பொழுது கல்யாணம் முடிஞ்சு 10 வருஷமும் ஆயிடுச்சு.. ஒரு நாள் மதுரை போயிருந்தோம். அங்கே ஒரு கடையின் முன்னாடி இந்த புத்தகம்.. அதுவும் 5 பாகம் ஒன்று சேர்ந்து.. என் கணவனிடம் கேட்டு புத்தகத்தை வாங்கி விட்டேன். புத்தகம் கையில் கிடைத்ததும் அவ்வளவு சந்தோஷம் என் குழந்தைய தூக்கிற மாதிரி.... இதைவிட சிறப்பு என்னன்னா புத்தகத்தின் மீது ஆர்வம் இல்லாத என் கணவர்;என் சின்ன சின்ன ஆசைக்காக நான் செய்யும் செயலுக்கு தடை போடாமல் இருக்கும் குணம்;நான் தேடாமல் கிடைத்த பொக்கிஷத்திற்கு சமம்..... வாழ்க்கையில் நாம் தேடாமல் கிடைத்த பொக்கிஷங்களாகிய உறவுகளை, நட்புகளை என்றும் மறக்காதீர்!  ...

மர்மம் 😀 ( funny Scary story)

Image
 மர்மம்...😄 உங்களுக்கு இந்த கதை  தெரியுமா தெரியல.ஆனா நான் சின்ன வயசுல ரொம்ப ரசிச்ச கதை இது. (பயங்கரமான கதை😄) என்னை விட சின்ன பசங்க கிட்ட எல்லாம் இந்த கதையை சொல்லும்போது செம ஜாலியா இருக்கும். வாங்க அந்த கதைக்குள் போய் நாம் ரசிக்கலாம்.. ( முக்கியமான விஷயம் இந்த கதை சொல்லும் போது ரொம்ப அமைதியான வாய்ஸ் ல  சொல்லணும்...) ஒரு ஊர்ல ஒரு பாட்டியும் பேரனும் இருந்தாங்க. பாட்டி சொல்லுற எந்த ஒரு விஷயத்தையும் பேரன் கேக்கவே மாட்டான்... பேரன் ரொம்ப ஊதாரித்தனமாக இருந்தான். பாட்டிக்கு ரொம்ப கவலையா இருந்துச்சு.  பாட்டிக்கிட்ட ஒரு மோதிரம் இருந்துச்சு. அதை  கேட்டுட்டே இருந்தான் பேரன். பாட்டி கொடுக்கவே இல்லை... ஒரு நாள் பாட்டி இறந்துட்டாங்க. அவங்களுடைய இறுதிச்சடங்கு  நடந்துச்சு. பேரன் பாட்டியை புதைத்த அப்புறமா அந்த இடத்துக்கு போயி பாட்டியோட கையில் இருந்து மோதிரத்த கழற்றினான். மோதிரம் எடுக்கவே முடியல. "கிழவி மண்டைய போட்டும் நம்மள பாடா படுத்துது"  நெனச்சுட்டு ஒரு சின்ன கத்திய வச்சு பாட்டியோட விரலை வெட்டி எடுத்துட்டான். மோதிரத்தை பார்த்ததும் அவனுக்குள் அவ்ளோ சந்தோஷம்... கொஞ்...