Posts

Showing posts from June, 2021

குறிக்கோள்.

Image
       மதியம் நித்ராதேவி சுத்தி இருக்கிற மரம் முலமா சிலுசிலுன்னு காத்து கொடுத்து,   மாணவர்களை தழுவ முயற்சித்து கொண்டு இருந்தது.  இளங்கலை மேலாண்மை மூன்றாம் ஆண்டு : மதியம் 2 மணி , கடைசி வகுப்பு  ஆசிரியர் குழு முறை  கலந்துரையாடக்காக மாணவ மாணவியருக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். அது, கடைசி வகுப்பு என்பதால் ஆசிரியர் மாணவர்களை உற்சாகப்படுத்த, "என்னென்ன டாபிக் பேசனும் நினைக்கிறீர்களோ? பேசலாம். யாரு பஸ்ட் வந்து பேசப் போறாங்க பார்ப்போம்"? என்றார். சில மாணவமணிகள் யாருக்கு வந்த விருந்தோ என்று அமர்ந்து கொண்டு இருந்தனர். சிலர் என்ன தலைப்பு கொடுத்து பேசலாம் தீவிரமாக  யோசிச்சுகிட்டு இருந்தனர். பேசத் துவங்கினர் சிலர். நன்றாக பேசினர்; கைதட்டும் வாங்கினர்.  அடுத்த முறை நக்ஷத்ரா கம்பீரமாக முன் சென்றாள். படிப்பில்  சுமாராக மதிப்பெண் வாங்குபவள். அனைவரும் இவள் என்னத்த பேச போறா என்பதுபோல் இருந்தனர்.    வணக்கம்! நா பேச போற டாபிக்  குறிக்கோள் (ambition). (சில மாணவர்கள் தங்களுக்குள் "சுத்தம் "என்று முணுமுணு...

தயக்கம் ஊக்கமாக மாறிய கதை...

Image
  விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி , தூத்துக்குடி . புதன் காலை 9 மணி   ஸ்கூல் மணி அடித்தது. அசம்பிளி (assembly) கூடியது. கிளாஸ் வரிசையா எல்லோரும் நின்னோம்.  தலைமை ஆசிரியை வந்தாங்க. தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து பாடி முடித்ததும்  ஹேண்ட் ரைட்டிங் போட்டிக்கான முடிவு வாசிச்சாங்க. 8வது ஸ்டாண்டர்ட் படிக்கும் மாணவி நடுக்கத்துடன் நின்றாள். ஆம் அவள் தமிழ் ஹேண்ட் ரைட்டிங் போட்டியில் கலந்து இருந்தா. முதல்முறையா போட்டியில் கலந்து கொண்டது இதுதான். அதுவும் அவளோட தமிழ் ஆசிரியரின் உதவியோடும், ஊக்கத்தோடும்.  அவளுக்கு பயம் என்னன்னா, "ஹாண்ட் ரைட்டிங் நல்லா இருக்குன்னு தெரியும் ".ஆனா பெருசா போட்டின்னு கலந்து கிடையாது. ஹேண்ட் ரைட்டிங் நல்ல எழுதுவதுகூட திறமைதான். அப்படிங்கிறது அவளோட ஆசிரியர் சொல்லி தான் அவளுக்கு புரிந்தது. தலைமைஆசிரியர் ஒவ்வொரு ஒவ்வொருத்தரா பரிசு கொடுத்தார்கள். இங்கிலீஷ் ஹாண்ட் ரைட்டிங் தனியா, தமிழ் ஹாண்ட் ரைட்டிங் தனியா பரிசு கொடுத்தார்கள் .இவள் கலந்து கொண்டது தமிழ் ஹாண்ட் ரைட்டிங் போட்டியில். பரிசு பாத்திரங்களை ஒரு மாணவி எடுத்து கொடுத்து கொண்டிர...

பெண்ணின் பூரணத்துவம் ....

Image
  பெண்ணின் பூரணத்துவம்         பெ ண் பிறந்ததிலிருந்து கூடவே பயணித்த தன் சகோதரி, சகோதரன், கூடப் படித்த தோழியர், பெற்றோர், ஆசிரியர் ஏன் ஊரையும் சேர்த்தே பிரிகிறாள். திருமணமானதும் மணம் புரிந்த கணவன், குழந்தைகள், புகுந்த வீட்டார்களுடன் பயணிக்கிறாள். குழந்தைகளுக்காகவே வாழ்ந்து அவர்களை உலகம் என்று வாழ்ந்து வந்தவளுக்கு மகளின் திருமணம் என்பது இரண்டாவது பிரிவு. மகளுக்கு திருமணம் முடித்து பேரன் பேத்திகளில் பொக்கிஷத்தை காண்கிறாள். மகனுக்கும் திருமணம் முடிந்து மருமகளும் வந்த பிறகு தன் சந்ததியை வளர்க்க வந்த பெண்ணுக்கு தன் மகனை விட்டுக் கொடுக்கிறாள். இதுவே மூன்றாவது பிரிவு. இறுதியில் கணவனோடு வாழ்ந்து அவளது இறுதி மூச்சு விடும் போது அவள் கொண்ட உயிர் பிரியும்போது நான்காவது பிரிவு. ஆனால் ஒவ்வொரு பிரிவிலும் அவளுக்கு புது உறவு கூடுகிறது. *தாய் தந்தையை பிரிந்து கணவனோடு உறவு கூடுகிறது. *மகளைப் பிரிந்து மருமகன் ஓடும் பேரன் பேத்திகளுடன் புது உறவு கூடுகிறது. *மகனோடும் மருமகள் ஓடும் தன் சந்ததி வாழும் புது உறவு கூடுகிறது. ஒவ்வொரு பிரிவின் முடிவிலும் பெண்மை மெருகேறுகிறது. *இறுதியில் இ...

டயரி குறிப்புகள்

Image
       அம்மாவும் ,மகனும் சிறு வயதில் சனி,  ஞாயிறு லீவு முடிந்து திங்கள் ஸ்கூல் திறக்கும் நாள்.   காலையிலையே "அம்மா... இன்னைக்கு ஸ்கூல் போனும் மா"... என்று ஒரு விதமான ஏக்கத்தோடு கண்ணீர் தளும்ப கேட்டான். அப்பொழுது அவன் என்  நெஞ்சின் அருகில், கையின் அருகாமையில். 22 வருடம் கழித்து.... ஞாயிறு இரவு போன் செய்து "ம்மா... காலையில் ஆபீஸ் போகனும்" சொல்றான். ஆனால் அவன்  பல மையில் அப்பால் எங்கோ தொலைவில்.....  இப்பொழுது என் கண்களில் கண்ணீர் தளும்புகிறது, குரல் தடுமாறுகிறது, சமாளித்து கொண்டு சிரித்து கொண்டே சொன்னேன் அன்று போல, "உனக்கு என்னப்பா?உன்னை வெல்ல யார் இருக்கார்? தைரியமாக போய் வா என்று....." 

அழகு...💕

Image
கண்ணுக்கு மை அழகு... கரு(மை)க்கு *வளியில் இருக்கும் *மஞ்சு அழகு வருடும் தென்றல் அழகு... முன் நெற்றி முத்தம் அழகு... குழந்தை அழுகை அழகு.. அதை விட சிரிப்பு அழகு .. சின்ன நடை அழகு ..(மகள்) சிங்க நடை அழகு..(மகன்) கொஞ்சும் தமிழ் அழகு .. ரெண்டை பின்னல் அழகு .. வெட்க சிரிப்பு அழகு... அறுப்பு மீசை அழகு... வெள்ளி முடி அழகு... பெரியோர் சொல் அரிது.. அதை ஏற்று நடப்பது மிக அழகு ... *வளி- காற்று. * மஞ்சு - மேகம்.

இயற்கை🏞️

Image
அன்னை மடி சொர்க்கம் புவியன்னை மடி சொர்க்கம். பஞ்ச பூதமாம் புவி; பஞ்சகபாதம் செய்து அளிக்கிறோம். தவிர்ப்போம் நெகிலியை. நடுவோம் மரக்கன்றுகளை; செழிக்க வைப்போம் புவியை. வீடுக்கு ஒரு மரம் அல்ல; நபர்க்கு ஒரு செடி வளர்ப்போம். உயிரில்லா சாதனம் வேண்டா; இயற்கையோடு பேசும் மொழி அறிவோம். பெரும் பேறு பெறுவோம்; சுற்றுச்சூழல் பேணி காப்போம்...

நேரம் பொன்னது...⏳

Image
அனைவருக்கும் வணக்கம்.  ஒரு குட்டி ஸ்டோரி பார்க்கலாமா.... நேரத்தோட முக்கியத்துவம்  பற்றிய கதை.   வாங்க கதைக்கு போகலாம்  ஒரு ஊருல ஒரு குட்டிப் பையன் இருந்தான். பையன் பேரு ரோகித் சுட்டிபையன் அவங்க அம்மா வீட்டுப்பாடம் டெய்லி பண்ணுன்னு சொல்லிட்டே இருப்பாங்க. ஒரு நாள் அவன் ஸ்கூல்க்கு போகாமல் பக்கத்தில் இருக்கும் வயலுக்கு போய் விளையாடினான்.  அங்க விவசாயி விதை விதைத்து கொண்டு இருந்தான். அவரிடம் போய் என்னோட விளையாட வருவிகளா?கேட்டான். அவர் முடியாது பா. இன்னும் கொஞ்ச நாள்ல மழை காலம் வரும்.அப்போ அறுவடைக்கு பயிர் தயார் நிலையில் இருக்கனும் சொன்னார்.  ரோஹித் சுற்றும் முற்றும் பார்த்தான் ஒரு மரத்தின் அடியில் எரும்பு கூட்டங்கள் சென்று கொண்டு இருந்தன.   ரோகித் அதனிடம் சென்று "என் கூட விளையாட வரீங்களா"? என்று கேட்டான். அதற்கு எறும்பு கூட்டத்தின் தலைவன் நாங்கள் உணவை சேமிக்க சென்று கொண்டு இருக்கிறோம் மழைக்காலம் அருகில் இருக்கிறது என்று கூறியது. ரோகித், "மழைக்காலம் வர நேரம் இருக்கிறதல்லவா; பின்பு ஏன் இப்பொழுது உணவை சேமிக்கி வேண்டும்?...