கடவுள்...
வணக்கம் மக்களே! என்னடா ரொம்ப நாளா ஆள காணோம் அப்படின்னு நீங்க கேட்கறது என் காதுல கேட்குது.. என்ன பண்றது கன்டென்ட் சரியா கிடைக்கவே இல்ல சோ நானும் அப்படியே யோசிக்கிட்டே இருந்தேன்... அப்பதான் என் தோழி என் தங்கை நித்யா மாரியப்பன் அவங்க சொன்னாங்க "அக்கா! நீங்க வந்து கன்டன்ட் இல்லை யோசிக்காதீங்க. நிறைய இருக்கு. புக்ஸ் பத்தி கூட நீங்க என்ன நினைக்கிறீங்க அதைச் சொல்லலாம்." சொன்னாங்க. உடனே என் மண்டைக்குள்ள டான்னு ஒரு மணி அடித்தது. என்னோட போட்காஸ்டு ல நான் ஒரு புக்கை பத்தி பதிவு பண்ணி இருந்தேன். எத்தனை பேரு என்னோட போட்காஸ்ட் கேட்கீங்கன்னு எனக்கு தெரியாது. சரி அதையே இங்க நா எழுதுகிறேன். (It's not a book review dears....) நந்திபுரம் புத்தகத்தின் பெயர். ஆசிரியர் இந்திரா சௌந்தரராஜன். ஒரு கிராமத்துல ஒரு பழமையான சிவன் கோயில் இருக்கு . அந்த கோயில்ல புதையல் இருக்கு. அதை தேடிக்கட்டு நிறையபேர் வருவாங்க. ஆனா அந்த புதையலை நந்தி பெருமாள் மற்றும் சித்தர்கள் காவல் காக்கிறார்கள். இது சித்தர்கள் பத்தின கதையும் கூட. இந்த புத்தகத்தின் மூலமாக வாஸ்து சாஸ்திரத்தைப் பற்றி ...