மழையில் தொலைந்த மஞ்சள் குடை (Yel(love) Umbrella..
Chapter 2 மழை இன்னும் நிற்கவில்லை. சாலையோரத்தில் நின்றபடி, கையில் இருந்த புத்தகத்தை அர்ஜூன் திரும்ப ஒருமுறை பார்த்தான். அதன் அட்டையில் மழைத்துளி ஒட்டி இருந்தன. அவன் விரல்களால் அதை மெதுவாக துடைத்தான். பிறகு முதல் பக்கத்தை திறந்தான். அதில் அழகான கையெழுத்தில் ஒரு பெயர். " நந்தினி " அந்த பெயரை அவன் மெதுவாக மனசுக்குள்ள உச்சரித்துப் பாத்தான். " நந்தினி"... ஏனோ அந்த பெயர் அவன் மனசுல ஒரு விசித்திரமான அமைதிய கொடுத்தது. யார் அவள்? எங்க இருக்கிறாள்? என்ன செய்கிறாள்? எதுவுமே தெரியாது. ஆனால் அவளை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவன் மனசுல ஆழமா தோன்றிட்டு. அவன் புத்தகத்தை பத்திரமா மூடி விட்டு பைக்கில் ஏறினான். வீட்டிற்கு வந்த பிறகும் அந்த புத்தகம் அவன் மேசையிலேயே இருந்தது. அன்று இரவு தூங்...