மழையில் தொலைத்த மஞ்சள் குடை.. Yel(love)Umbrella..
ஒரு கனவின் தொடக்கம். CHAPTER 9 காலை சூரியன் மெதுவா மேகங்களுக்கு இடையே எட்டி பாத்து கொண்டிருந்தது. நேத்து பெய்த மழையோட ஈரம் இன்னும் ரோட்டுல இருந்தது. அர்ஜூன் வழக்கத்துக்கு மாறா சீக்கிரம் லைப்ரேரிக்கு வந்தான். லைப்ரேரி கதவு திறந்திருந்தது. உள்ள வந்ததும், குழந்தைகளோட சிரிப்பு சத்தம் கேட்டது. "அக்கா.... இந்த புக் எனக்கு! " "இல்ல இல்ல... முதல்ல நா தான் எடுத்தேன்". இரண்டு சிறுவர்கள் சண்டை போட்டுட்டு இருந்தாங்க. நந்தினி சிரிச்சுட்டே அவங்ககிட்ட போனா. "சண்டை போடக்கூடாது... இந்த வாரம் நீ படி, அடுத்த வாரம் அவன் படிக்கட்டும். சரியா?" இரண்டு பேரும் சரின்னு அமைதியா போனாங்க. அத பாத்த அர்ஜூன் ஆச்சரியப்பட்டான். "இவ்வளவு சீக்கிரமா சமாதானம் பண்ணிட்டியே?" "அவங்களோட கோபம் ரொம்ப நேரம் இருக்காது. பெரியவங்களுக்கு தான் ஈகோ அதிகம்". அவ சிரிச்சா. அர்ஜூனும் சிரிச்சான். மதியம் வரை இருவரும் LIBRARY புக் எல்லாம் அரேஜ் பண்ணி வைச்சாங்க. ஒரு corner பழைய புக் நிறைய இருந்தன. "இவ்ளோ பழைய புக் என்ன பண்ணப் போற?" ன்னு கேட்டான் அர்ஜூன். நந்தினி அந்த பு...