Happy place.....
இயந்திர வாழ்வில்
சமையல்,வேலை, தூக்கம்
என்று அன்றாடம் செய்து ஒரு நாள் சலிப்பான போது
இயற்கை சூழ்ந்த இடத்தில்
மழையில் அந்த குளிரில்
நாமும் குழந்தை தான் என்று எண்ணி
பிடித்த பாடலை
சத்தத்துடன் பாடி
நடனம் ஆடி
ரசிப்போம்...
வாழா வாழ்வை வாழவே....
என்று பாடல் நம் மனதில் ஒலிக்கும்.
அப்பப்போ நம்முள் இருக்கும் சிறு குழந்தையை
உணர வேண்டும்
ரசிக்க வேண்டும்...
கஷ்டம் யாருக்கு தான் இல்லை ஆடி கார் வைத்திருக்கிறவனுக்கும் கஷ்டம் இருக்கு...
உனக்குள் இருக்கும் குழந்தையை ரசிக்க
இயந்திர வாழ்க்கையில் இருந்து சிறிது இடைவெளி தேவை...
காசு இருக்கிறவன் தான் சுற்றுலா போகணும்னு அவசியம் இல்ல..
அந்த காலத்துல கூட அவங்க வாழும் வாழ்க்கையில் கொண்டாட்டங்கள், திருவிழாக்கள், பண்டிகைகள்
இருக்கு..
உங்களுக்கு பிடிச்ச இடத்துக்கு பிடிச்சவங்களோட ஒரு நாலு நாள் அமைதியா நீங்க டெய்லி செய்ற வேலையிலிருந்து இடைவெளி விட்டு போயிட்டு வாங்க...
பெருசா தெரிகிற பிரச்சனை எல்லாம் சரி பாத்துக்கலாம் அப்படிங்கற மாதிரி மனசு லேசா ஆகிடும்....
இந்த படம் மூணாறில் நாங்கள் சுற்றுலா போனபோது அந்த விடுதியில் ... அந்த மர வீட்டில் மழையில் நனைந்து பாட்டு பாடி மகிழ்ந்த இடம்.....
ஊருக்கு கிளம்பும்போது தான் மழை நின்றது அன்று எடுத்தது இந்த புகைப்படம்....
Comments